search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி
    X

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி

    • வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது
    • 3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கீழத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அருள் மாணிக்கராஜ் (வயது 39).இவரிடம் திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த ஷாஜகான் என்பவர் அறிமுகமாகி, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி முதல் கட்டமாக ரூ.75 ஆயிரம் பணம் பெற்றுள்ளார்.மேலும் அவருடைய நண்பர்கள் ரஞ்சித் குமார், அருள்ஜோரன், குமார் ஆகியோருக்கு வெளிநாடு வேலைக்கு மேலும் சில லட்சங்களை மாணிக்கராஜ் ஷாஜகானிடம் கொடுத்துள்ளார்.பின்னர் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் ஷாஜகான் காலம் தாழ்த்தி வந்தார். பணத்தையும் திருப்பி தரவில்லை. இதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த அருள் மாணிக்கராஜ், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சத்ய பிரியா உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் ஷாஜகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் பாப்பா காலனியை சேர்ந்தவர் பாலு (வயது 47)இவரிடம் ஆன்லைனில் மூலம் திருவாரூர் மாவட்டம் தில்லை வளாகம் தெற்கு காடு கிராமத்தை சேர்ந்த வேலரசன் மற்றும் வைரவேல் ஆகிய இருவர் அறிமுகமாகி கனடாவில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலுவை நம்ப வைத்தனர். இதனை நம்பிய பாலு, தனக்கும் தன்னுடைய நண்பர்கள் 8 பேருக்கும் கனடா வேலைக்கு ரூ.12 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் இருவரும் இழுத்தடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து பாலு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பொழுது சரிவர பதில் கூறவில்லை. இது தொடர்பாக பாலு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கமிஷனர் சத்யப்பிரியா உத்தரவின் பேரில் இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வேலரசன், வெற்றிவேல் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×