search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேஸ்புக் காதலியின் படத்தை வாகனத்தில் வரைந்த வாலிபர்
    X

    பேஸ்புக் காதலியின் படத்தை வாகனத்தில் வரைந்த வாலிபர்

    • வீடு சூறை-பதட்டத்தால் போலீஸ் குவிப்பு
    • மண்ணச்சநல்லூர் அருகே பரபரப்பு

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள காளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார். சொந்தமாக டாட்டா ஏசி வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். இவர் தில்லாம்பட்டியைச் சேர்ந்த முதலாமாண்டு கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.அவ்வண்டியில் அப்பெண்ணின் புகைப்படத்தை இரண்டு பக்க கதவுகளிலும் வரைந்து உள்ளார். இதை பெண்ணின் உறவினர் ஒருவர் பார்த்துள்ளார். உடனே அந்த பெண்ணின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனைக் கண்டு கொந்தளித்த ஊர் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு காளவாய்ப்பட்டியில் உள்ள செல்வகுமார் வீட்டிற்கு சென்றனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை அடித்து நொறுக்கினர். மேலும் அவரது வீட்டையும் சூறையாடி உள்ளனர்.அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒருவர் செல்வகுமாரின் அண்ணன் கோபியை வயிற்றில் சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளார். அவர் தற்பொழுது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த பெண் என்னால்தான் கலவரம் ஏற்பட்டது என்று கூறிவந்தார். அத்துடன் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் இருந்த பெயிண்ட் அடிக்கும் தின்னரை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அப்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இரு ஊர் பிரச்சினை என்பதால் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் காளவாய்ப்பட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காளவாய்ப்பட்டியில் இளைஞர் வீட்டை சூறையாடிய 13 பேரை போலீசார் கைது விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×