search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பணிக்காக குவிக்கப்பட்ட கற்களை அகற்றக்கோரி மறியல்
    X

    சாலை பணிக்காக குவிக்கப்பட்ட கற்களை அகற்றக்கோரி மறியல்

    • மண்ணசச்சநல்லூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
    • சாலை விரைந்து அமைத்து தர வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூனாம்பாளையம் அழகு நகரில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதற்கிடையே திருச்சி-துறையூர் நெடுஞ்சாலையில் உள்ள அழகு நகரில் சாலை அமைப்பதற்காக கற்களை கொட்டி ஒன்றை மாதங்களாகியும் தார்ச்சாலை அமைக்காமல் சாலை நடுவே குவிக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் அந்த குடிருப்பு பகுதிக்குள் மருத்துவமனை செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்லமுடியவில்லை. இதனால் பலமுறை பூனாம்பாளையம் ஊராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் அழகு நகரில் வசிக்கும் மக்கள் தீடீரென இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் உள்ள கற்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் கோஷம் போட்டனர். மேலும் அழகு நகரில் 400 குடும்பங்களுக்கு 2 குடிநீர் பைப் மட்டுமே உள்ளது. போதிய அளவு குடிநீர் வழங்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.இப்பகுதியில் உள்ள கற்களை விரைந்து சாலை அமைத்து தரப்படும் என்று அவர் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    Next Story
    ×