search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது

    • 14 நாட்களில் ரூ.1.04 கோடி உண்டியல் காணிக்கை வசூல்
    • 2 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளியும் கிடைக்கப்பெற்றது

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி, கோயிலின் மண்டபத்தில் நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 1 கோடியே 4 லட்சத்து 24 ஆயிரத்தி 485 ரூபாயும், 2 கிலோ 759 கிராம் தங்கமும், 5 கிலோ 117 கிராம் வெள்ளியும், 113 வெளிநாட்டு கரன்சிகள், 264 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைக்கப் பெற்றன. காணிக்கை எண்ணிக்கை மாதம் இருமுறை எண்ணப்படுகிறது. இதற்கு முன் மே மாதம் 9-ந்தேதி எண்ணிக்கை நடைபெற்றது.

    Next Story
    ×