search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் மிதந்த பள்ளி மாணவியின் உடல்
    X

    கிணற்றில் மிதந்த பள்ளி மாணவியின் உடல்

    • மாயமான மாணவியை தேடி வந்த நிலையில் கிணற்றில் பிணம் மிதப்பு
    • போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த பெற்றோர் மீது வழக்கு

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி லதா. இந்த தம்பதியினர் மகள் ஹேமலதா (வயது 17). இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வு எழுதி 336 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ஹேமலதா திடீரென மாயமானார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அருகில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் ஹேமலதாவின் காலணிகள் கிடந்ததால் சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தினர் கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்தனர்.

    அப்போது அவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பிணமாக மிதந்த மாணவியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். உடனே அவசர அவசரமாக உடலை அருகில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்று அவரது பெற்றோர் எரித்து விட்டனர்.இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தானத்தம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவியை பெற்றோர் திட்டியதால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாணவி இறந்தது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தெரிவிக்காமல் உடல் ஏரிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி பண்ணப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாண்டீஸ்வரன் புத்தானத்தம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் மாணவியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×