search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து
    X

    சாலையில் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து

    • தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்
    • லாரியில் இருந்து குதித்து டிரைவர் உயிர் தப்பினார்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சி.ஆர். பாளையத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன். இவர் திருச்சியில் இருந்து சி.ஆர். பாளையம் செல்வதற்காக தனது லாரியில் கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியின் டீசல் டேங்கில் ஏற்பட்ட கசிவினால் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது.தீ விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர் பாரதிதாசன் லாரி இருந்து குதித்து உயிர்த் தப்பினார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வந்தனர். சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார், ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் லாரி பலத்த சேதம் அடைந்தது.சமயபுரம் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×