search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தாயின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு சிறுமி பலாத்காரம்
    X

    தாயின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு சிறுமி பலாத்காரம்

    • தாயின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு கொள்ளையர்கள் சிறுமியை பலாத்காரம் செய்தனர்.
    • நகைகளையும் பறித்துச் சென்ற கொள்ளையன்

    திருச்சி:

    திருச்சி கே.கே. நகர் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் அம்சா பேகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது 17 வயது மகளுடன் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு தாயும் மகளும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். அம்சா பேகம் தனி அறையிலும் அதன் அருகாமையில் உள்ள இன்னொரு அறையில் மகளும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் அதிகாலை 3.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் அம்சா பேகத்தின் வீட்டு கேட் கதவு பூட்டினை உடைத்தார். பின்னர் அவர் வீட்டின் முன்பக்க கதவு தாழ்ப் பாளை இரும்பு ராடால் நெம்பி உள்ளே புகுந்தான்.

    கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு அம்சா பேகம் திடுக்கிட்டு எழுந்தார். உடனே கொள்ளையன் அந்தப் பெண்மணியின் வாயில் துணியை நுழைத்து அமுக்கிக் கொண்டு கை கால்களை கட்டி போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த ஒன்றே கால் பவுன் நகைகளை பறித்துக் கொண்டான்.

    அதன் பின்னர் அருகில் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அவரது 17 வயது மகளின் கை, கால்களையும் கட்டி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது அந்த சிறுமி கதறி அழுதார். உடனே சத்தம் போட்டால் உன் தாயை கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு தப்பி சென்றுள்ளான். கை கால்களை கட்டி போட்டு நகையை கொள்ளை அடித்து அவரது மகளை பலாத்காரம் செய்த மர்ம நபர் குறித்த விபரம் எதுவும் கிடைக்கவில்லை. அந்தக் கொள்ளையன் முகத்தை கர்சிப்பால் மறைத்து கட்டி இருந்ததாக அம்சா பேகம் தெரிவித்தார்.

    இது பற்றி அம்சா பேகம் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×