என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கத்தியை கட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவர் கைது
- கத்தியை கட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறிப்பு
- மேலும் இவர் மற்றொரு மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைது
திருச்சி,
திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 38). இவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர் சட்டை பையில் இருந்து ரூ1,000 பணத்தை பறித்துக் கொண்டதுடன், மோட்டார் சைக்கிளையும் பறித்துக்கொண்டு சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது, நாமக்கல் மோகனூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது32) என்பதும் இவர் மீது 6 மோட்டார் சைக்கிள் திருடியதாக மாநகர போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர் மற்றொரு மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டிள்ளார் என்பது தெரிய வந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்