search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குடியிருப்புக்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு
    X

    குடியிருப்புக்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு

    • தீயணைப்பு வீரர்கள் வனத்துறையிடம் ஒப்படடைத்தனர்
    • காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள குப்பம்பட்டு கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் செல்லக்கூடிய உத்திரக்காவேரி ஆற்றில் இருந்து சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இறைச்சியை தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி ஊர்ந்து வந்துக்கொண்டு இருந்தது.

    இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறைக்கு மற்றும் தீயனைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படடைத்தனர். மேலும் பிடிப்பட்ட மலைப்பாம்பினை சாக்கு பையில் அடைத்து அருகே இருந்த காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

    Next Story
    ×