என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
லாட்ஜில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் திடீர் சாவு
வேலூர்:
வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வந்து வேலூரில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதியில் தங்குகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் சகாபூர் பகுதியைச் சேர்ந்த ரத்தன் டோலி (வயது 47) என்பவர் சிகிச்சைக்காக வேலூர் வந்திருந்தார். அவர் பாபுராவ்தெருவில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு சுயநினைவு இழந்தார். உடனடியாக அவரை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரத்தன் டோலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரத்தன் டோலி ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டி ருந்தார். அதனால் அவர் இறந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்