search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேலூர் தெற்கு செயலாளர் செல்வி தலைமை தாங்கினார். வேலூர் வடக்கு செயலாளர் பாண்டுரங்கன், காட்பாடி செயலாளர் சுடரொளியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் சங்கரி வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தயாநிதி கலந்து கொண்டு பேசினார். இதில் அணைக்கட்டு அடுத்த அத்திமரத்துக்கொல்லை மலை கிராமத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்.

    மலை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பகுதிநேர ரேசன் கடை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாராயணன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×