search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தமிழ் முருகன் மாநாடு: அரசியல் சாயம் பூச வேண்டாம்- விஜய் வசந்த்
    X

    முத்தமிழ் முருகன் மாநாடு: அரசியல் சாயம் பூச வேண்டாம்- விஜய் வசந்த்

    • இறைவன் முருகனை பற்றி புகழ்வதற்கோ அல்லது பேசுவதற்கோ நாள் கிழமை என்பது கிடையாது.
    • எல்லாமே ஓட்டுக்கான யுக்தி என்று சொல்ல முடியாது.

    முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றதை பற்றி விஜய் வசந்த் எம்.பி.யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    இறைவன் முருகனை பற்றி புகழ்வதற்கோ அல்லது பேசுவதற்கோ நாள் கிழமை என்பது கிடையாது. ஒவ்வொரு வழிபாட்டு தளங்களிலும் ஒவ்வொருடைய இறைவன் வழிபாடுகள் இருக்கும்.

    அதில் முருக பெருமனை வைத்து ஒரு கூட்டம் நடக்கிறது. எல்லாவற்றையுமே விமர்சனம் செய்வது என்பது தவறான விஷயம் என்பதை பதிவு செய்கிறேன். பழனி கோவிலில் முருகனை பற்றி கருத்தரங்கம் நடை பெற்றது. இதை அரசியல் ஆக்கவேண்டாம் என்று தான் சொல்வேன். இதற்கும் தேர்தலுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இது அரசங்கம் நடத்தும் ஒரு நிகழ்ச்சியகவே நான் கருதுகிறேன்.

    கேள்வி- முத்தமிழ் முருகன் மாநாடு பற்றி இது ஓட்டுக்கான யுக்தி என்று தமிழசை சொல்கிறார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன.

    பதில்- எல்லாமே ஓட்டுக்கான யுக்தி என்று சொல்ல முடியாது. தமிழக அரசை குறை சொல்வது தவறானது. அது அவர்களுடைய கருத்து சொல்லி இருக்கிறார். ஆனால் தேர்தலுக்கான ஒரு பணியாக கருதவில்லை. இதை இறைவனுக்கு செய்கிற பணியாகவே கருதுகிறேன்.

    கேள்வி- தமிழக வெற்றி கழகம் சார்பில் கொடி அறிமுகம் செய்து இருக்கிறார்கள். பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதை பற்றி உங்கள் கருத்து?

    பதில்- விமர்சனங்கள் இல்லாமல் எதுவும் இல்லை. மக்களும் அரசியல் வட்டராங்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள தருணத்தில் விமர்சனங்கள் இயற்கையானது. இந்த விமர்சனங்களை தாண்டி வருவது தான் வெற்றிக்கான இலக்கு. வருங்காலங்களில் இந்த விமர்சனங்களை எப்படி கையாளுகிறார் என்பதை பார்ப்போம்.

    கேள்வி- பிரதமரின் உக்ரைன் பயணம் எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக அமையும்.

    பதில்- உக்ரைனுக்கு பிரதமர் மோடி முதல் முறையாக சென்றார். அங்குள்ள பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். அதன் நிலைப்பாடு இனிமேல் தான் தெரியும்.


    இதனிடையே விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவு-

    கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்றி கூறும் பயணம் நடைபெற்று வருகிறது. வழிநெடுகிலும் அன்பும் ஆதரவும் தந்து கொண்டிருக்கும் பொது மக்களுக்கும், காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி நிர்வாகிகளுக்கும் நன்றி.

    Next Story
    ×