search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
    X

    பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

    • பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். அப்போது வெள்ளக்கோட்டை பகுதியில் 6 பேர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

    இதையடுத்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.46 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார், சூதாடிய வெள்ளக்கோட்டையைச் சேர்ந்த அருண்குமார் (வயது 31), சோலையப்பன் (41), கீழத்தெரு ரமேஷ் (52), திருச்சுழி ரூபன் (41), அன்பு நகர் ஆறுமுகம் (40), முஸ்லிம் கிழக்கு தெரு பாதுஷா (35) ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×