என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
- தலைமை ஆசிரியர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, மலர்கொடி தலைமை தாங்கினர்.
தலைமை ஆசிரியர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
அதனைத் தொடர்ந்து சிறந்த ஆசிரியர்களுக்கு பிள்ளையார் நத்தம் ஊர்மக்கள் சார்பில் பாராட்டு விழாவும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு பொங்கல், கரும்பு, பனங்கிழங்கு வழங்கப்பட்டது.
பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் சேதுராமன், ஊர் தலைவர் குணசேகரன், செயலாளர் குமரேசன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் சுந்தரி கோவிந்தராஜ், பூவாணி கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணசாமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்