search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது
    X

    தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

    • செலவுக்கு பணம் கொடுக்காததால் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைதானார்.
    • பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காளிமுத்து நகரை சேர்ந்தவர் முருகவேல் (வயது 26). இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து (36), ஆட்டோ டிரைவர். முருகவேலின் சகோதரரான இவர் மனைவியை பிரிந்து தனியே வசித்து வருகிறார் .

    மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தாய் மற்றும் சகோதரர் முருகவேலிடம் பணம் கேட்டு தகராறு செய்தார்.

    ஆனால் அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வைரமுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகவேலை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த முருகவேல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் முருகவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரமுத்துவை கைது செய்தனர்.

    Next Story
    ×