search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
    X

    கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

    • கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சாமுண் டீஸ்வரி. இவர்கள் 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    திருமண ஆசை காட்டி பலமுறை சாமுண் டீஸ்வரியை, நாகராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்னர் நாகராஜூக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது. அப்போது சாமுண்டீஸ்வரி திருமணம் செய்து கொள்ளுமாறு நாக ராஜிடம் கேட்டார். ஆனால் நாகராஜ் அதற்கு மறுத்துவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாமுண்டீஸ் வரி புகார் செய்தார். போலீசாரின் அறிவுறுத் தலை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியை நாகராஜ் திருமணம் செய்து கொண்டார். 25 நாட்கள் குடித்தனம் நடத்தி வந்த நிலையில் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு நாகராஜ் வேலைக்கு சென்றார்.

    பின்னர் திரும்பி வந்தபோது, நாகராஜ் வீட்டாருக்கும், சாமுண் டீஸ்வரிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் 50 பவுன் நகைகள் கொண்டு வந்தால் மட்டுமே நாகராஜூ டன் சேர்ந்து வாழ அனுமதிப்பதாக நாகராஜின் தாய் வரதம்மாள், உறவினர் வீரம்மாள் ஆகியோர் கூறியுள்ளனர்.

    மேலும் நாகராஜூம், தாயுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை கொண்டு வருமாறு வற்புறுத்தி யுள்ளார். இதையடுத்து மீண்டும் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் சாமுண்டீஸ்வரி புகார் செய்தார். போலீசார் நாகராஜ், அவரது தாய் வரதம்மாள், வீரம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×