search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்
    X

    பராசக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் இன்று பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

    • பராசக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • இதன் காரணமாக விருது நகர் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.

    தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவில் நேற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் படை யலிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை உடுத்தி 21 அக்னி சட்டி, 101 அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். மேலும் பலர் குழந்தையை கரும்பு தொட்டிலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் காரணமாக விருது நகர் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

    Next Story
    ×