search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவி கர்ப்பம்
    X

    பிளஸ்-2 மாணவி கர்ப்பம்

    • ராஜபாளையத்தில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • மாணவியிடம் மாரிமுத்து நெருங்கி பழகி உள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவரும், அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 23) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாரிமுத்து டிப்ளமோ படித்துள்ளார்.

    இந்த நிலையில் திருமணம் செய்வதாக கூறி அந்த மாணவியிடம் மாரிமுத்து நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த மாணவி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனிடையே இந்த விவ காரம் குறித்து ராஜபாளை யம் விரிவாக்க அலுவலர் மேத்தா மேரிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் சம்பவ இடம் சென்று விசாரித்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து அவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி மாணவியை கர்ப்பிணி யாக்கிய மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

    Next Story
    ×