search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை வாங்கித்தருவதாக ரூ.1 லட்சம் மோசடி
    X

    வேலை வாங்கித்தருவதாக ரூ.1 லட்சம் மோசடி

    • வேலை வாங்கித்தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்தனர்.
    • வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவரது மகன் பொன் சங்கிலிபாபு. எம்.பி.ஏ. முடித்துள்ள இவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்தநிலையில் ராஜபாளையத்தில் வேலைக்கு ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனம் பொன் சங்கிலிபாபுவுக்கு ரஷ்யாவில் வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளது. இதனை நம்பி அவர்களது கணக்கில் தேன்மொழி ரூ.1 லட்சம் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமல் தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பண மோசடி செய்ததாக பிள்ளையார்குளத்தை சேர்ந்த பொம்மன், அவரது மனைவி நாகலட்சுமி ஆகியோர் மீது வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×