search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்த சூப்பிரண்டு
    X

    சீனிவாச பெருமாள்

    போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்த சூப்பிரண்டு

    • சாத்தூர் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
    • போலீஸ் சூப்பிரண்டின் தொடர் அதிரடி ஆய்வு காரணமாக போலீசாரிடையே பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாதாரண உடையில் விருதுநகரில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் உள்ள ஆமத்தூ ருக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டு நள்ளிரவு நேரத்தில் போலீஸ் நிலை யங்களில் ஆய்வு செய்தார்.

    போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி ஆய்வை பொது மக்கள் வரவேற்றனர். இந்த நிலையில் 2-வது முறையாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நேற்று நள்ளிரவு விருதுநகரில் இருந்து சாத்தூருக்கு தனியாக சைக்கிளில் பயணம் செய்தார். அப்போது அவர் வழியில் சட்டம் -ஒழுங்கு தொடர் பாக பொதுமக்களிடம் கேட்டறிந்ததாக தெரிகிறது.

    நள்ளிரவில் சாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற சீனிவாச பெருமாள் அங்கு அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் குற்றங்கள் குறைய தீவிர ரோந்து மேற்கொள்ள வேண்டும் என போலீ சாருக்கு உத்தரவிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சீனிவாச பெரு மாளின் தொடர் அதிரடி ஆய்வு காரணமாக போலீ சாரிடையே பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    Next Story
    ×