search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது ஏன்? வானிலையாளர் தகவல்
    X

    கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது ஏன்? வானிலையாளர் தகவல்

    • வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
    • வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி தற்போது வரை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து 104 டிகிரி வரை வெயில் அளவு பதிவாகி உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் வெயிலில் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசி வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் காலை 11.30 மணி அளவில் 101.48 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது. இதன் காரணமாக வழக்கம் போல் அனல் காற்று வீசி வந்த நிலையில் மதியம் திடீரென்று வானிலை மாற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கொட்டி தீர்த்த மழையாக மாறியது. மேலும் இடி மின்னல் மற்றும் காற்று வீசி வந்ததால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டன. இந்த மின்தடை சுமார் 4 முதல் 5 மணி நேரம் நீடித்தது.

    சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்திருந்த நிலையில், இந்த திடீர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடும் வெப்ப சலனம் மற்றும் வெயிலின் தாக்கம் 104 டிகிரிக்கு மேல் இருந்து வந்த நிலையில் ஏன் திடீர் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது என வானிலையாளர் பாலமுரு கனிடம் கேட்டபோது, தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வழக்கத்தை விட அதிக அளவில் வெப்ப சலனம் ஏற்பட்டு சுட்டெரிரக்கும் வெயில் இருந்து வந்தது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி வரும் நிலையில் தமிழகத்தில் வெப்பம் குறைந்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று கேரள மாநிலத்தில் தொடங்காத காரணத்தினாலும் கடலில் ஈர பதக் காற்று நேரம் தவறி வருவதால் கடும் வெப்பம் நிலவி வந்தது. ஆனால் நேற்று மதியம் கிழக்கிலிருந்து வரக்கூடிய ஈரப்பத காற்று சரியான நேரத்திற்கு உள்ளே வந்தது. மேலும் அதிக வெப்ப சலனம் இருந்து வந்த நிலையில் , திடீரென்று ஈரப்பதற்காற்று உள்ளே வந்ததால் வானிலை மாற்றம் ஏற்பட்டு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

    பலத்த காற்று ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் எப்போதும் மேற்கு திசையில் இருந்து வரக்கூடிய வறண்ட காற்று வெப்ப சலனமாக மாறி அனல் காற்று அதிகரிப்பதாகும். மேலும் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே வெப்ப சலனம் அதிகமாக உள்ள நேரத்தில் திடீர் மழை ஏற்பட்டபோது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது குறிப்பிடத்தக்கதாகும் என தெரிவித்தார். கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வழக்கமான விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சுமார் 500- க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேப்பூர் - 75.0 பண்ருட்டி - 71.0 கீழச்செருவாய் - 36.0 லக்கூர் - 19.4 கலெக்டர் அலுவலகம் - 18.0 கடலூர் - 16.4 குப்பநத்தம் - 12.8 மீ-மாத்தூர் - 12.0 வானமாதேவி - 11.2 பெல்லாந்துறை - 9.6 விருத்தாசலம் - 9.0 வடக்குத்து - 8.3 எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 6.0 காட்டுமயிலூர் - 5.0 தொழுதூர் - 4.0 கொத்தவாச்சேரி - 3.0 குறிஞ்சிப்பாடி - 3.0 பரங்கிப்பேட்டை - 2.8 அண்ணாமலைநகர் - 2.2 புவனகிரி - 2.0 சிதம்பரம் - 1.6 என மொத்தம் - 328.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது

    Next Story
    ×