search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாவட்டபோலீஸ் சூப்பிரண்டுடன்  டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆலோசனை
    X

    மாவட்டபோலீஸ் சூப்பிரண்டுடன் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆலோசனை

    • நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று வந்தார்.
    • அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி அவ ருக்கு பூங்கத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று வந்தார் . அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி அவ ருக்கு பூங்கத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுடன் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆலோ சனை நடத்தினார். அப்போது மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது? போதைப் பொருட்கள் தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஓராண்டில் எவ்வளவு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன? எவ்வ ளவு வழக்குகள் நிலுவையில் உள்ளது? ஓராண்டில் எவ்வளவு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, போலீஸ் நிலையங்களில் உள்ள காலி பணியிடங்கள் மற்றும் போலீசாரின் தேவைகள் குறித்தும், கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டியது குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

    மேலும் சிறப்பாக பணியாற்றி குற்றச்செ யல்களை தடுக்க தீவிர மாக கண்காணிப்பு நடவடிக்கை யில் ஈடுபடுமாறும் போலீஸ் அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீசாருக்கு விருது வழங்கி கவுரவித்தார். டி.ஜி.பி ஆய்வு செய்வதை அறிந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன், மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சினை கள் மற்றும் நிலவரம் குறித்து விரிவாக டிஜிபி சைலேந்திரபாபு கேட்டறிந்தார்.

    Next Story
    ×