search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்  பேத்தியை கடத்தியதாக தந்தை -  சகோதரர்கள் மீது பெண் பரபரப்பு புகார்
    X

    கடலூரில் பேத்தியை கடத்தியதாக தந்தை - சகோதரர்கள் மீது பெண் பரபரப்பு புகார்

    • சம்பவத்தன்று பூங்கொடியின் மகளைதிடீரென்று காணவில்லை.
    • சிலர் அடிக்கடி சந்தித்து பேசி வந்ததாக தெரிய வருகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எம்.புதூைர சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி பூங்கொடி (வயது 34). இவர்களுக்கு 11-ம் வகுப்பு படிக்கும் மகள் இருந்து வருகிறார். சம்பவத்தன்று பூங்கொடியின் மகளைதிடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பூங்கொடி மற்றும் அவரது உறவினர்கள் தனது மகளை தேடிய போது அவரது தந்தை ஆரங்கி வீட்டில் மகள் இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பூங்கொடி கொடுத்த புகாரில், எனது தந்தை அரங்கிடம் பணம் கொடுத்திருந்தேன். அந்த பணம் தொடர்பாக கேட்டபோது பணம் தரவில்லை. இந்த நிலையில் எங்களுக்கு தெரியாமல் எனது மகளை ஆரங்கி மற்றும் சிலர் அடிக்கடி சந்தித்து பேசி வந்ததாக தெரிய வருகிறது. சம்பவத்தன்று எனது மகளை காணவில்லை என்று தேடிய போது எனது தந்தை ஆரங்கி மற்றும் சகோதரர்கள் வீட்டில் கடத்தி வைத்துள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக எனது கணவர் பழனிவேல் கேட்டதற்கு அவரையும் என்னையும் தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கம் படுத்தினர். இவ்வாறு புகாரில் கூறி இருந்தார். சம்பவத்தின் போது தாக்கியதில் பூங்கொடி அவரது கணவர் பழனிவேல் ஆகியோர் காயம் அடைந்தனர். இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீசார் ஆரங்கி, அவரது மகன்கள் பாண்டித்துரை, முருகவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×