என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
- கும்பகோணத்தில் இருந்து திருவாரூருக்கு தனியார் பஸ்சில் வந்துள்ளார்
- வளைவில் பஸ் திரும்பும் போது நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்தார்.
திருவாரூர்
திருவாரூரை அடுத்த வடகண்டம் பகுதியை சேர்ந்தவர் ஹசன். இவருடைய மனைவி ஹபீப் நிஷா (வயது 31). ஹசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
ஹபீப் நிஷா நேற்று தனது உறவினர் ஒருவருடன் பவித்ரமாணிக்கம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு செல்வதற்காக கும்பகோணத்தில் இருந்து திருவாரூருக்கு தனியார் பஸ்சில் வந்துள்ளார்.
காட்டூர் அருகே உள்ள விளாகம் பகுதியில் பஸ் சென்ற போது, பஸ் நிறுத்தத்தில் இறங்குவதற்காக ஹபீப் நிஷா எழுந்து வாசல் அருகே நின்று உள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வளைவில் பஸ் திரும்பும் போது நிலைதடுமாறி அவர் பஸ்சில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹபீப் நிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்