search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்
    X

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

    காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்

    • பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், கொய்யா தோப்பு பகுதி மக்கள் முகமது நாசர் தலைமையில் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார் ஆகியோர் போராட்டக்கா ரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டக்காரர்கள் பேரூராட்சியில் இருந்த அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார்.

    இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள்களைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×