என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தகுதி இல்லாதவர்களுக்கு பணி சான்றுதொழிற்சங்க பிரதிநிதிகள் மீது நடவடிக்கை
- தொழிலாளர்கள் நல வாரியம் உள்ளிட்ட 18 நல வாரியங்கள் ஏற்ப டுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
- 18 வயது முதல் 60 வயதிற்குள் உள்ள அனைத்து தொழில் செய்யும் தொழிலாளர்களும் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர்.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசார தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலா ளர்களின் பணிநிலைமை களை ஒழுங்குப்படுத்தவும், அவர்களுக்கு சமூக பாது காப்பு அளிக்கவும் தமிழ்நாடு அரசு 1982-ம் ஆண்டில் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணிநி லைமைகள் ஒழுங்குப்படுத்து தல்) சட்டத்தினை இயற்றி, தற்போது தமிழ்நாடு கட்டு மானத் தொழிலாளர்கள் நல வாரியம், அமைப்புசார தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் உள்ளிட்ட 18 நல வாரியங்கள் ஏற்ப டுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதில், 18 வயது முதல் 60 வயதிற்குள் உள்ள அனைத்து தொழில் செய்யும் தொழிலாளர்களும் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர்.
2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்புமனுக்கள் அனைத்து இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.
அரசின் திட்டங்கள் அனைத்தும் உண்மையான தொழிலாளர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும், இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள தொழிலா ளர்களின், தொழிலின் உண்மை தன்மை அறியும் பொருட்டும், சேலம் தொழி லாளர் இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சேலம் தொழிலாளர் உதவி ஆணை யர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கீதா, இணைந்து சேலம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இக்கள ஆய்வின்போது தொழிலா ளர்களிடம் அவர்கள் செய்யும் தொழில் குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டது. உண்மையான தொழில் செய்யும் தொழிலா ளர்களுக்கு, உறுப்பினர் பதிவு அடையாள அட்டை ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இணை யதள பதிவில் குறிப்பிட்ட, தொழில் செய்யாத தொழி லாளர்களின் இணையதள பதிவு விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு, உண்மையான தொழில் செய்யாத தொழி லாளர்களுக்கு பணிச்சான்று வழங்கிய தொழிற்சங்க பிரதிநிதிகள் மீது சட்ட ரீதி யான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்ச ரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்