search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுடுதண்ணீர் கலனில் தவறி விழுந்து  வடமாநில தொழிலாளி சாவு
    X

    சுடுதண்ணீர் கலனில் தவறி விழுந்து வடமாநில தொழிலாளி சாவு

    • தண்ணீர் கொதிக்க, கொதிக்க இருந்தால் பலத்த காயமடைந்த ரூபேஷ்குமார் வலியால் அலறி துடித்தார்.
    • அவர் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஓசூர்,

    பீகார் மாநிலம் பகவான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஷ்குமார் (வயது23). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெலத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எந்திரம் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் அங்குள்ள ஒரு எந்திரத்தின் உதிரிபாகங்களை சுத்தம் செய்வதற்காக சுடுதண்ணீர் நிரம்பிய கலனுக்கு எடுத்து சென்றார்.

    அப்போது அந்த சுடுதண்ணீர் கலனில் தவறிவிழுந்தார். அதில் தண்ணீர் கொதிக்க, கொதிக்க இருந்தால் பலத்த காயமடைந்த ரூபேஷ்குமார் வலியால் அலறி துடித்தார்.

    உடனே அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×