search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் காதல் திருமணம் செய்த 1½ வருடத்தில் இளம்பெண் தற்கொலை
    X

    கோவையில் காதல் திருமணம் செய்த 1½ வருடத்தில் இளம்பெண் தற்கொலை

    • இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
    • சீதா லட்சுமி உணவு சமைக்காமல் செல்போனை பயன்படுத்தி கொண்டு இருந்தார்.

    கோவை :

    கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியாம் பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சீதா லட்சுமி (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். ஆனால் குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று சிவக்குமார் வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றார். அப்ேபாது சீதா லட்சுமி உணவு சமைக்காமல் செல்போனை பயன்படுத்தி கொண்டு இருந்தார். இது குறித்து சிவக்குமார் கேட்ட போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது மனைவியிடம் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார்.

    கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த சீதா லட்சுமி வாழ்க்கையில் விரக்தி அடைந்த தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் வீட்டிற்கு திரும்பிய சிவக்குமார் மனைவி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் தற்கொலை செய்து கொண்ட சீதா லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 1½ வருடத்தில் சீதா லட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×