search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    குணம் காட்டும் கையெழுத்து!
    X

    குணம் காட்டும் கையெழுத்து!

    • எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள் எந்த பிரச்சனைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள்.
    • சங்கிலி தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.

    நாம் ஒருவரது குணத்தை கைரேகை, நட்சத்திரம், ராசி, பிறந்த தேதி மூலம் தெரிந்து கொள்ளலாம். கையெழுத்து மூலமும் அறிய முடியும். ஒருவர் எழுதும் போது அவரது கையெழுத்தானது மாறுபடும். அதன் மூலம் ஒருவரது குணத்தை அறியலாம்.

    பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் உடையவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகார தன்மை உடையவர்கள்.

    சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையும் திட்டவட்டமாக செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.

    எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்க்கையில் இன்பம் காண்கிறவர்கள்.

    எழுத்துக்களை இடப்பக்கமாகச் சாய்த்து எழுதுபவர்கள் பயந்த சுபாவம் உடையவர்கள். நடந்து முடிந்த விஷயங்களை நினைத்து கவலைப்படுவார்கள்.


    எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள் எந்த பிரச்சனைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். இவர்கள் இன்னல்களை எதிர்த்து நிற்க மன உறுதி படைத்தவர்கள்.

    வார்த்தைகளுக்கு இடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களை பிரித்து எழுதுகிறவர்கள் சமூகத்தில் தனித்திருப்பார்கள்.

    சங்கிலி தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.

    எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள் குறுகிய மனப்பான்மைக் கொண்டவர்கள்.

    எழுதும் போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப்போக்கு உடையவர்கள்.

    எழுத்துக்களை நீட்டி நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள் எந்தக் காரியத்திலும் அசாதாரண துணிச்சலைக் காட்டுவார்கள்.

    எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள் வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள்.

    எழுத்துக்களின் சுழிகளை அதிகமாகச் சுழிப்பவர்கள் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.

    எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், கடுஞ்சிரத்தையும், பிறர் விரும்பாத மனோபாவத்தையும் கொண்டவர்கள்.

    எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.

    -நட்டாத்தி முருகேஷ்

    Next Story
    ×