search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    Raghav Chadha
    X

    இங்கிலாந்து போல வரி செலுத்துகிறோம், சோமாலியா போல சேவைகளை பெறுகிறோம்: ஆம் ஆத்மி தாக்கு

    • தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இது.
    • மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் பேசினார்.

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா கூறியதாவது:

    மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது சமூகத்தின் சில பிரிவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஆனால், இம்முறை அரசாங்கம் அனைவரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. பா.ஜ.க. ஆதரவாளர்கள்கூட அதிருப்தியில் உள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி, ஜிஎஸ்டி மற்றும் மூலதன ஆதாய வரி போன்ற வரிகள் மூலம் பொதுமக்களின் வருமானத்தில் 70 முதல் 80 சதவீதத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ளது.

    நாங்கள் இங்கிலாந்தைப் போல வரி செலுத்துகிறோம். ஆனால் சோமாலியாவைப் போல சேவைகளைப் பெறுகிறோம்.

    உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், போக்குவரத்து, கல்வி போன்றவற்றை அரசாங்கம் நமக்கு வழங்குகிறதா?

    2019-ல் பா.ஜ.க. அரசுக்கு 303 இடங்கள் கிடைத்தன. ஆனால் மக்கள் அந்த இடங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யை விதித்து அவற்றை 240-க்கு கீழே கொண்டு வந்தனர்.

    கடந்த 25 மாதங்களில் உண்மையான கிராமப்புற ஊதியங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    உணவுப் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றால் தான் குறைவான இடங்கள் கிடைத்தன.

    இந்தப் போக்குகள் தொடர்ந்தால் வருங்கால தேர்தல்களில் பா.ஜ.க. இன்னும் குறிப்பிடத்தக்க இடங்களைவிட சரிந்து 120 இடங்களுக்குக் குறையக் கூடும் என தெரிவித்தார்.

    Next Story
    ×