என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கியது ஆந்திரா ஐகோர்ட்
- விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
- அதில் தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
அமராவதி:
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல் மந்திரியாக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடுவை ஆந்திர சிஐடி போலீசார் கடந்த மாதம் 9-ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சந்திரபாபு நாயுடு மீது அமராவதி உள்வட்ட சாலை வழக்கு, பைபர் நெட் வழக்கு, அங்கள்ளு பகுதியில் போலீஸ் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய வழக்கு என மேலும் 3 வழக்குகளை ஆந்திர அரசு பதிவு செய்தது.
இந்த 3 வழக்குகளில் முன் ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர மாநில ஐகோர்ட்டு, அங்கள்ளு போலீஸ் வழக்கு, அமராவதி உள்வட்ட சாலை வழக்கு ஆகியவற்றில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி ஆந்திரா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜாமின் மனு ஆணை ஜெயிலில் வழங்கப்பட்டதும் சந்திரபாபு நாயுடு ஜெயலில் இருந்து வெளியே வருவார் என தெரிவித்துள்ளனர்.
.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்