search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க.வுக்கு கோரிக்கை விடுக்கிறோமா? சஸ்பென்ஸ் உடைத்த தெலுங்கு தேசம்
    X

    பா.ஜ.க.வுக்கு கோரிக்கை விடுக்கிறோமா? சஸ்பென்ஸ் உடைத்த தெலுங்கு தேசம்

    • ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 3 முக்கிய மத்திய மந்திரி பதவிகளை கேட்கிறார்.
    • அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ளது.

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைக்க உள்ளது.

    இதனால் புதிய மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் ஒதுக்குவது? பா.ஜ.க.வில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஒரு புறம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இதனிடையே தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் கிங் மேக்கர்களாக உள்ளனர். அவர்கள் இருவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் கட்சிக்கு அதிக மந்திரி பதவியை கேட்க தொடங்கி உள்ளனர். இதனால் பா.ஜ.க. தரப்பினர் செய்வதறியாது தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    ஆந்திர மாநிலத்திற்கு கூடுதலாக நிதி தேவை என்பதால் நிதி அமைச்சகத்தில் ராஜாங்க மந்திரி பதவியையும் சந்திரபாபு நாயுடு கேட்கிறார்.

    இதற்கிடையே ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 3 முக்கிய மத்திய மந்திரி பதவிகளை கேட்கிறார். மேலும் ராஜாங்க மந்திரி பதவிகளையும் அவர் எதிர்பார்த்து பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜன சேனா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ளது.

    இந்நிலையில் ஆந்திராவில் முஸ்லீம் இடஒதுக்கீடு தொடருமா என்ற கேள்விக்கு, தெலுங்கு தேசம் கட்சியின் கே.ரவீந்திர குமார், ஆம், நாங்கள் அதை தொடர்வோம். எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு முந்தைய கூட்டம் கடந்த 5-ந்தேதி நடைபெற்றது. இன்று நடைபெறுவது 2-வது கூட்டமாகும். இன்றைய கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியிடம் இருந்து சில உதவிகள் கேட்கப்படும். இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஜூன் 9-ந்தேதி பிரதமர் பதவியேற்பார் என்று தெரிகிறது.

    அதற்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான கோரிக்கையை குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும். அதன்பின்னர் பிரச்சனைகள் தொடர்பாக நாங்கள் விவாதிப்போம்.

    இன்று கோரிக்கைகளை விவாதிக்கும் மேடை அல்ல. ஆனால் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறோம். இது தேர்தலுக்கு முந்தைய கூட்டணி. கோரிக்கை என்ற கேள்விக்கு இடமில்லை. முதலில் மத்திய அரசின் திட்டங்களையும், மத்திய-மாநிலப் பகிர்வு சட்டத்தையும் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆந்திரப் பிரதேசம் 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதால் மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே முன்னுரிமை என்று கூறினார்.

    Next Story
    ×