search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 19-ந்தேதி வெளியீடு
    X

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 19-ந்தேதி வெளியீடு

    • அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 10 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
    • சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் (ரூ.300) ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன.

    திருமலை:

    திருமலை- திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு 19-ந்தேதி காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இந்தச் சேவை டிக்கெட்டுகளை எலக்ட்ரானிக் டிப் செய்வதற்கான ஆன்லைன் பதிவு 21-ந்தேதி காலை 10 மணி வரை செய்யலாம். இந்த டிக்கெட்டுகளை பெறுபவர்கள் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் லக்கி டிப்பில் டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும்.

    22-ந்தேதி காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.

    உற்சவ சேவைகளுக்கான ஒதுக்கீடு, அவற்றின் தரிசன ஸ்லாட்டுகள் 22-ந்தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.

    அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 10 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.

    ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 11 மணியளவில் வெளியிடப்படும்.

    முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய் வாய்ப்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23-ந்தேதி மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகின்றன.

    சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் (ரூ.300) ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன.

    திருமலை, திருப்பதியில் ஜனவரி மாதத்துக்கான அறைகள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.

    https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×