search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    நீதி தேவதையின் பழைய, புதிய சிலைகளை படத்தில் காணலாம்.
    X

    கிரீடம், அரசியல் சாசன புத்தகத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட நீதி தேவதை சிலை

    • புதிய சிலையானது, தலையில் கிரீடம், நெற்றி திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைப்பட்டுள்ளது.
    • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் திறந்து வைத்தார்.

    புதுடெல்லி:

    ஆங்கியேலர் ஆட்சி காலத்தின் போது, சுப்ரீம் கோர்ட்டில் நீதி தேவதை சிலை நிறுவப்பட்டது. அந்த நீதி தேவதை சிலையின், கண்கள் கருப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் தராசு, வலது கையில் வாளும் இருக்கும்படி அமைக்கப்பட்டு இருந்தது.

    பாகுபாடு பார்த்து நீதி வழங்காமல் இருக்கவும், சரிசமமாக எடை போட்டு சரியான தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதையும், அநீதியை வீழ்த்த வாள் இடம் பெற வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் இந்த நீதி தேவதையின் சிலை வடிவமைக்கப்பட்டது.

    இந்நிலையில், நீதி தேவதையின் சிலையில் சில மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நீதி தேவதையின் புதிய சிலையில், கண்களில் கருப்புத்துணி இல்லை. அதேபோல் வலது கையில் வைக்கப்பட்டிருந்த வாளுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தமும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய சிலையானது, தலையில் கிரீடம், நெற்றி திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைப்பட்டுள்ளது.

    இந்த புதிய நீதிதேவதை சிலை, சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் திறந்து வைத்தார்.

    இந்த புதிய சிலை சொல்லும் செய்தி குறித்து வெளியான தகவலில், "சட்டம் ஒருபோதும் குருடாகாது. அது அனைவரையும் சமமாக பார்க்கிறது என்பதை வலியுறுத்தி நீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் சட்டங்களின்படி நீதி வழங்கப்படுகிறது என்பதை வலியுறுத்தும் வகையில், நீதி தேவதையின் வலது கையில் இடம் பெற்றிருந்த வாளுக்கு பதிலாக, அரசியலமைப்பு புத்தகம் இடம் பெற்றுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×