search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
    X

    பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

    • 36 வீரர்களுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
    • விபத்தில், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காமில் உள்ள பள்ளத்தாக்கில் இன்று பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில், பேருந்தில் பயணித்த எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ராணுவ வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பணிக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட பேருந்தில் 36 ராணுவ வீரர்கள் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, புத்காம் மாவட்டத்தில் உள்ள வட்டர்ஹாலின் ப்ரெல் அருகே உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்துள்ளது.

    பிறகு, உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×