search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    அரியானா தேர்தல் முடிவுகளை ஏற்கமாட்டோம்: காங்கிரஸ் அறிவிப்பு
    X

    அரியானா தேர்தல் முடிவுகளை ஏற்கமாட்டோம்: காங்கிரஸ் அறிவிப்பு

    • அரியானாவில் பா.ஜ.க. வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.
    • காங்கிரஸ் அங்கு 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    அரியானாவில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. அங்கு காங்கிரஸ் 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பவன் கெரா, அரியானா மாநில தேர்தல் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

    தேர்தல் முடிவு எதிர்பார்க்காதது. ஆச்சர்யமாக உள்ளது. கள நிலவரத்திற்கு எதிராக உள்ளது.

    அரியானா மக்களின் எண்ணங்களுக்கு மாறாகவும், ஆட்சி மாற்றம் என்ற விருப்பத்திற்கு எதிராகவும் உள்ளது.

    இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தல் முடிவுகளை ஏற்கமுடியாது என்பதை நாங்கள் அறிவிக்கிறோம்.

    ஓட்டு எண்ணிக்கை குறித்தும், மின்னணு ஓட்டு எந்திரம் செயல்பாடு குறித்தும் 3 மாவட்டங்களில் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    கட்சி நிர்வாகிகளுடன் பேசி உள்ளோம். புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளோம். எங்களது வேட்பாளர்கள் எழுப்பிய கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க உள்ளோம்.

    அரியானா தேர்தல் வெற்றி என்பது முறைகேடான வெற்றி. மக்களின் விருப்பத்திற்கு எதிரான வெற்றி. வெளிப்படையான ஜனநாயகத்திற்கு எதிரான வெற்றி.

    காஷ்மீரிலும் காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கக் கூடாது என முயற்சி நடந்தது. ஆனால், மக்கள் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளனர் என தெரிவித்தார்.

    Next Story
    ×