என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பண மோசடி தடை சட்டத்தின்கீழ் 93 சதவீதம் தண்டனை
- அமலாக்கத்துறை சார்பில் 7,083 அமலாக்க வழக்கு தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன.
- 1.39 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் சொத்துக்கள் பறிமுதல் அல்லது முடக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கில் 93 சதவீதம் வரை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேட்ட கேள்விக்கு மத்திய இணை நிதி மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அப்போது ஜூலை 31-ந்தேதி வரை அமலாக்கத்துறை சார்பில் 7,083 அமலாக்க வழக்கு தகவல் அறிக்கைகள் அல்லது ECIRs பதியப்பட்டுள்ளன. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 93 சதவீதம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டம் (PMLA) 2002-ல் இயற்றப்பட்டது. 2005 ஜூன்-1ல் அமல்படுத்தப்பட்டது.
1.39 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் சொத்துக்கள் பறிமுதல் அல்லது முடக்கப்பட்டுள்ளது. 3725.76 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 4,651.68 ரூபாய் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 1,31,375 கோடி ரூபாய் அளவிலான் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்