search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜார்க்கண்ட் மக்கள் நலனுக்காக பா.ஜ.க.வில் இணைய உள்ளேன்: சம்பாய் சோரன்
    X

    ஜார்க்கண்ட் மக்கள் நலனுக்காக பா.ஜ.க.வில் இணைய உள்ளேன்: சம்பாய் சோரன்

    • சம்பாய் சோரன். சுமார் 5 மாதங்கள் முதல் மந்திரியாக இருந்தார்.
    • சம்பாய் சோரன் நேற்று முன்தினம் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் சம்பாய் சோரன். சுமார் 5 மாதங்கள் அவர் முதல் மந்திரியாக இருந்தார்.

    ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் ஜாமின் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் தனது முதல் மந்திரி பதவியில் இருந்து விலகினார். அப்போது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்தார்.

    இதற்கிடையே, சம்பாய் சோரன் சமீபத்தில் டெல்லி சென்று பா.ஜ.க. மூத்த தலைவர்களைச் சந்தித்தார். அப்போதே அவர் பா.ஜ.க.வில் இணையலாம் என தகவல் பரவியது.

    சம்பாய் சோரன் நேற்று முன்தினம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா உடனிருந்தார். இதுதொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், பழங்குடியின தலைவருமான சம்பாய் சோரன், வரும் 30-ம் தேதி ராஞ்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில நலனுக்காக பா.ஜ.க.வில் இணைய முடிவெடுத்துள்ளதாக சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என்ற எனது முடிவானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் நலன்களைச் சார்ந்தது. நான் போராட்டங்களுக்கு பழக்கப்பட்டு விட்டேன். விரைவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்தும், மந்திரி பதவியில் இருந்தும் விலகுவேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×