search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பிரதமர் மோடிகிட்ட பேசியே ஆகணும்... மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு
    X

    பிரதமர் மோடிகிட்ட பேசியே ஆகணும்... மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு

    • சம்பவம் குறித்து கீதா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    டெல்லியின் யமுனா கதர் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கீதா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அந்த நபரை போலீசார் மற்றும் டெல்லி தீயணைப்பு துறையினர் பத்திரமாக கீழே இறக்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதனிடையே இச்சம்பவம் குறித்து பேசிய தீயணைப்பு வீரர் ஒருவர், "உயர் அழுத்த கம்பி தூணில் வாலிபர் ஒருவர் ஏறியுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது அவர், பிரதமர், முதல்வர், தலைமை நீதிபதியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்," என்றார்.

    அந்த நபர் வங்காளம் அல்லது பீகாரைச் சேர்ந்தவர் என்றும், ஆசிரியராகப் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×