search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திரப் பிரதேச வெள்ள நிவாரணத்துக்கு  ரூ.1 கோடி நிதி  வழங்கிய துணை முதல்வர் பவன் கல்யாண்
    X

    ஆந்திரப் பிரதேச வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய துணை முதல்வர் பவன் கல்யாண்

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
    • நடிகர் பிரபாஸ் தெலங்கானா- ஆந்திரா பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும் குறிப்பாக விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தனது சொந்த பணத்திலிருந்து ரூ.1 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இதேபோல் நடிகர் பிரபாஸ் தெலங்கானா- ஆந்திரா பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

    முன்னதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தனர்.

    ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற தெலுங்கு தேசம் வெற்றி பெட்ரா நிலையில் சாநிரபாபு நாயுடு முதலமைச்சர் ஆனார். அதே கூட்டணியில் இடம்பெற்ற ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பணியேற்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×