search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Madhya Pradesh Farmer
    X

    நில ஆக்கிரமிப்பு புகார்... ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி உருண்டு சென்ற விவசாயி - வீடியோ

    • ஆக்கிரமிப்பாளர்கள் தனது நிலத்தை கையகப்படுத்தி விட்டனர் என்று 2 ஆண்டுகளாக விவசாயி போராடி வருகிறார்
    • புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அனுப்குமார் சிங் உறுதியளித்துள்ளார்.

    மத்தியபிரதேச மாநிலத்தில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் தீர்வு காணப்படாததால் ஏமாற்றமடைந்த விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி உருண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆக்கிரமிப்பாளர்கள் தனது நிலத்தை கையகப்படுத்தி விட்டனர் என்று 2 ஆண்டுகளாக விவசாயி ஷியாம்லால், போராடி வருகிறார். 2 ஆண்டுகளாக தனது புகார்கள் புறக்கணிக்கப்பட்டதால் மனமுடைந்த அவர், பொது விசாரணைக்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உருண்டு சென்றார்.

    விவசாயி உருண்டு செல்வதை பார்த்து அதிர்ச்சியான மக்களை அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

    விவசாயியின் விண்ணப்பத்தைப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அனுப்குமார் சிங் உறுதியளித்துள்ளார்.

    Next Story
    ×