என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கூகுளுக்கு மேலும் ரூ.936 கோடி அபராதம்- இந்திய போட்டி ஆணையம் நடவடிக்கை
- பிளே ஸ்டோரில் பிரதான இடத்தில் இடம்பெற வேண்டுமானால், கூகுள் பிளே பில்லிங் முறையைத்தான், பண பரிமாற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று கெடுபிடி செய்ததாக கூறப்பட்டது.
- ஆன்ட்ராய்டு மொபைல்போனில் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பான மற்றொரு புகாரில், கடந்த 20-ந் தேதி கூகுளுக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.1,337 கோடி அபராதம் விதித்து இருந்தது.
புதுடெல்லி:
கூகுள் நிறுவனம், தனது கூகுள் பிளே ஸ்டோரில், செயலி உருவாக்கிய நிறுவனங்களிடம் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
அதாவது, பிளே ஸ்டோரில் பிரதான இடத்தில் இடம்பெற வேண்டுமானால், கூகுள் பிளே பில்லிங் முறையைத்தான், பண பரிமாற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று கெடுபிடி செய்ததாக கூறப்பட்டது.
இந்திய போட்டி ஆணையம் அந்த புகாரை விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில், கூகுள் நிறுவனத்துக்கு ரூ.936 கோடியே 44 லட்சம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டது. மேலும், நியாயமற்ற வர்த்தக செயல்பாடுகளை தவிர்க்குமாறு கூறியுள்ளது.
ஆன்ட்ராய்டு மொபைல்போனில் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பான மற்றொரு புகாரில், கடந்த 20-ந் தேதி கூகுளுக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.1,337 கோடி அபராதம் விதித்து இருந்தது. ஒரு வாரத்துக்குள் 2-வது முறையாக நேற்று அபராதம் விதித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்