search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் குறித்து ஹேமந்த் சோரன் பேச வேண்டும்: பா.ஜ.க.
    X

    வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் குறித்து ஹேமந்த் சோரன் பேச வேண்டும்: பா.ஜ.க.

    • வங்கதேசத்தில் இருந்து சாந்தல் பர்கானாவிற்கு ஊடுருவியவர்கள், நிலத்தை ஆக்கிரமித்தது பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
    • ஏனென்றால் இது அவருடைய வாக்கு வங்கி பற்றியது.

    பா.ஜ.க.-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பெருச்சாளிகளை போல் மாநிலத்துக்குள் ஊடுருவி அழிவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இந்த நிலையில் பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா ஹேமந்த் சோரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    ஹேமந்த் சோரன் கூறிய கருத்து தொடர்பாக ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-

    ஹேமந்த் சோரன் தேசியவாதிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பெருச்சாளி என்று அழைத்தார். ஆனால், வங்கதேசத்தில் இருந்து சாந்தல் பர்கானாவிற்கு ஊடுருவியவர்கள், நிலத்தை ஆக்கிரமித்தது பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏனென்றால், இது அவருடைய வாக்கு வங்கி பற்றியது. மக்கள் தொகை மாற்றம் ஜார்க்கண்டில் இல்லை. இது மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்துள்ளது எனச் சொல்கிறார்.

    மேற்கு வங்கத்தில் யாருடைய ஆட்சி நடைபெறுகிறது?. அங்கு பா.ஜ.க. ஆட்சி இல்லை. இடது சாரிகள் ஆட்சி செய்தன. தற்பேது திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. இடது சாரி அதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் மேற்கு வங்கத்தில் மக்கள் தொகை மாற்றம் நிகழ்ந்துள்ளதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

    இதன் அர்த்தம் இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு கட்சி மற்றொரு கட்சியை குறிவைக்கிறது. அவர்களுக்கு திட்டம் கிடையாது, பார்வை கிடையாது, பொதுவான பகுதி கிடையாது, அவர்களுடைய சொந்த ஊழல் மற்றும் குழப்பம் குறித்து ஒரே இலக்குதான். அவர் அவர்களை கவனக்குறைவாக அல்லது வேண்டுமென்றே தாக்கினாரா என்பது அவருக்குத்தான் தெரியும். ஆனால் உண்மையில் மேற்கு வங்கத்தில் மக்கள்தொகை மாற்றம் நிகழ்ந்துள்ளது என்ற உண்மை வெளிவந்துள்ளது.

    ஆனால், ஜார்க்கண்டிலும் இப்படித்தான் நடக்கிறது என்பதுதான் கேள்வி, உயர்நீதிமன்றமும் அதையே கூறியுள்ளது. இதுகுறித்து ஹேமந்த் சோரன் பேச வேண்டும்.

    இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×