search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரேபரேலியை குடும்ப தொகுதி என்பதா?- பிரியங்கா காந்தி மீது அமித் ஷா தாக்கு
    X

    ரேபரேலியை குடும்ப தொகுதி என்பதா?- பிரியங்கா காந்தி மீது அமித் ஷா தாக்கு

    • ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
    • அமேதி தொகுதியில் இந்த முறை சர்மா என்பவர் போட்டியிடுகிறார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் காந்தி குடும்பத்தை (ராகுல் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்) சேர்ந்தவர்கள் காலங்காலமாக போட்டியிட்டு வந்தனர்.

    கடந்த மக்களவை தேர்தலின்போது அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும் போட்டியிட்டனர். ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.

    தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். இதனால் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் இருந்து ரேபரேலி தொகுதிக்கு மாறியுள்ளார். அமேதி தொகுதியில் சர்மா போட்டியிடுகிறார்.

    ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி தனது சகோதரருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வருகிறார். ரேபரேலி தொகுதி குடும்ப தொகுதி என பிரியங்கா காந்தி அடிக்கடி கூறி வருகிறார்.

    இந்த நிலையில் அமித் ஷா அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் "ரேபரேலி எந்த குடும்பத்தின் தொகுதியும் கிடையாது. அது மக்களுடைய தொகுதி" என்றார்.

    மேலும், இயற்கை பேரழிவுகள் அல்லது விபத்துகளின் போது காந்தி குடும்பம் ரேபரேலிக்கு சென்றதில்லை என்று பாண்டே கூறியது சரிதான் என்றார்.

    சமாஜ்வாடி எம்.எல்.ஏ. பாண்டே இன்று அமித் ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் காங்கிரஸ் அதை நிராகரித்தது. காங்கிரஸ் ஆட்சியை வந்தால் அயோத்திக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் என்றார்.

    Next Story
    ×