search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இதுதான் சரியான நேரம்.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவோம்..- ஐஎம்ஏ தேசிய தலைவர்
    X

    இதுதான் சரியான நேரம்.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவோம்..- ஐஎம்ஏ தேசிய தலைவர்

    • இந்த விவகாரத்தில் இனி அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.
    • நாங்கள் மிகவும் அடிப்படை உரிமையை, வாழ்வதற்கான உரிமையை கேட்கிறோம்.

    கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன் என ஐஎம்ஏ தேசிய தலைவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் அசோகன் கூறுகையில், " இனி அரசு தான் பதில் சொல்ல வேண்டும். இனி பதில் சொல்லும் அரசியல் விருப்பம் அவர்களுக்கு இருக்கும்.

    ஏனென்றால் நாம் கேட்டது அவர்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. நாங்கள் மிகவும் அடிப்படை உரிமையை, வாழ்வதற்கான உரிமையை கேட்கிறோம். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதுவோம்.

    அவரது தலையீட்டிற்கான நேரம் கனிந்துள்ளது. நிச்சயமாக, அது (பிரதமர் மோடி தனது ஆகஸ்ட் 15 உரையில் பெண்கள் பாதுகாப்பு பற்றி குறிப்பிட்டது) அவர் அக்கறையுடன் இருப்பதைக் காட்டும் ஒரு அம்சமாகும். பிரதமருக்கு கடிதம் எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஐஎம்ஏ அதைச் செய்யும்." என்றார்.

    Next Story
    ×