search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா
    X

    மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா

    • சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது.
    • இந்தியாவை மத சுதந்திரத்திற்கு எதிரான நாடாக அமெரிக்க வகைப்படுத்த வேண்டும் என்றது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாக குறிப்பிட்டிருந்தது. வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பி இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

    இந்தியாவை மத சுதந்திரத்திற்கு எதிரான தொடர் அத்துமீறலில் ஈடுபடும் நாடாக அமெரிக்க அரசு வகைப்படுத்த வேண்டும்.

    2024-ல் இந்தியாவில் பல்வேறு தனிப்பட்ட நபர்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறைகள், மத தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள், மத வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி, அவை அனைத்தும் மத சுதந்திரத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் என குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த ஆணையத்தின் அறிக்கையை நிராகரித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த அமைப்பு ஒரு தலைபட்சமாக அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறது என குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்த அமைப்பு அரசியல் திட்டத்துடன் செயல்படும் ஒருதலைபட்சமான அமைப்பு. இதன் அறிக்கையானது இந்தியா குறித்து பொய் தகவல்களை கூறுவதுடன், கட்டுக்கதைகளை ஊக்குவிக்கிறது. இதுபோன்ற அறிக்கைகளை தயாரிப்பதை விட்டுவிட்டு, அமெரிக்காவிற்குள் நடக்கும் மனித உரிமை பிரச்சனைகளில் கவனம் செலுத்தினால் அந்த அமைப்பு பயன்பெறும் என்றார்.

    Next Story
    ×