search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    நிலவை நோக்கிய பயணம்- முக்கிய கட்டத்தை எட்டும் சந்திரயான் 3
    X

    நிலவை நோக்கிய பயணம்- முக்கிய கட்டத்தை எட்டும் சந்திரயான் 3

    • நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.
    • நிலவை நோக்கிய பயணத்தில் மூன்றில் இரண்டு பங்கை சந்திரயான் 3 நிறைவு செய்தது.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

    அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.

    இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது.

    ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    மேலும், சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை கடந்த ஜூலை 30ம் தேதி நிறைவு செய்தது என இஸ்ரோ தெரிவித்தது.

    நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும்.

    அதன்பின் நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.

    இந்நிலையில், நிலவை நோக்கிய பயணத்தில் முக்கிய கட்டத்தை நாளை சந்திரயான்- 3 நெருங்குகிறது.

    நாளை மாலை 7 மணிக்கு நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான் 3 செல்கிறது.

    Next Story
    ×