search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- ஜே.பி.நட்டா
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- ஜே.பி.நட்டா

    • அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.
    • தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை வரவேற்ற பாஜக தலைவர் ஜே.பி.நட்டா.

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டசபை தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

    அதன்படி, மிசோரமில் வரும் நவம்பர் 7ம் தேதி அன்றும், சத்தீஸ்கர் (2 கட்டங்கள்) - நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 அன்றும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதி அன்றும், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி அன்றும் தேர்தல் நடைபெறுகிறது.

    மேலும், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை வரவேற்ற பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, 5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜே.பி.நட்டா அவரது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயல்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×