search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே இறுதி ஷூட் அவுட் - பரபரப்பூட்டும் டிரோன் வீடியோ
    X

    காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே இறுதி ஷூட் அவுட் - பரபரப்பூட்டும் டிரோன் வீடியோ

    • பாராமுல்லா மாவட்டம் சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் நடந்த மோதல் நடந்தது
    • வீட்டின் காம்பவுண்ட் சுவரின் அருகில் இருந்து பக்கத்தில் உள்ள மரங்களை நோக்கி பயங்கரவாதிகள் ஓடுகின்றனர்

    காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் உள்ள சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள்-பாதுகாப்புப் படையினர் இடையே கடந்த சனிக்கிழமை அன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் காயமடைந்த 2 வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஒளிந்திருந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கியால் தாக்கினர். கதுவா பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    இதையடுத்து அன்றைய தினமே பாராமுல்லா மாவட்டம் சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பான பரபரப்பூட்டும் டிரோன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

    அந்த வீடியோவில் வீட்டின் காம்பவுண்ட் சுவரின் அருகில் இருந்து பக்கத்தில் உள்ள மரங்களை நோக்கி பயங்கரவாதிகள் ஓடுவதும், ஒருவன் தரையில் விழுந்து தவழ்ந்து செல்லும்போது ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டுகள் கான்கிரீட் சுவரைத் துளைத்து அப்பகுதியை புழுதிப் புகை சூழ்வதும் பதிவாகியுள்ளது. இதனால் பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் குண்டடிபட்ட பயங்கரவாதி உயிருக்கு போராடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×