search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசியல் பழிவாங்கும் செயல்: சந்திரபாபு நாயுடு மீது ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
    X

    அரசியல் பழிவாங்கும் செயல்: சந்திரபாபு நாயுடு மீது ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு

    • சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
    • மாநிலத்தில் சட்டமும் நீதியும் முற்றிலும் மறைந்துவிட்டன.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்க, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவி ஏற்றார்.

    இந்த நிலையில் குண்டூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என கட்சி அலுவலக இடிப்பு குறித்து ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அடக்குமுறையை கையில் எடுத்துள்ளார். கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகத்தை சர்வாதிகாரி போல் புல்டோஸர் மூலம் இடித்துள்ளார். சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டன. மாநிலத்தில் சட்டமும் நீதியும் முற்றிலும் மறைந்துவிட்டன.

    சந்திரபாபு நாயுடுவின் ஐந்தாண்டு கால ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்ற செய்தியை இந்த சம்பவத்தின் மூலம் தந்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள், வன்முறைகளுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அடிபணியாது. பின்வாங்கவும் செய்யாது. மக்களுக்காக கடுமையாக போராடுவோம்.

    இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×